உலக நன்மை வேண்டி மேட்டுப்பாளையத்தில் 1,008 திருவிளக்கு பூஜை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பருவமழை பெய்யவும், உலக நன்மை வேண்டியும் 1,008 திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பருவமழை பெய்யவும், உலக நன்மை வேண்டியும் 1,008 திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.

கோவை, நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில் நல்ல மழை பெய்த போதும், மேட்டுப்பாளையத்தில் இந்தாண்டு போதிய மழை பொழிவு என்பது இல்லை. மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருக்கும் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன.இதனால், விவசாய பணிகளுக்கு போதிய நீர் ஆதாரம் கிடைக்காத நிலையில், பருவ மழை நன்கு பொழிய வேண்டியும், உலக நன்மை வேண்டியும் மேட்டுப்பாளைய பகுதி பெண்கள் கலந்து கொண்ட 1,008 திருவிளக்கு வனபூஜை நடைபெற்றது.



மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற இந்தப் பூஜையில், தமிழ் முறைப்படி சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் உச்சரித்து பொதுமக்கள் குங்குமம் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்து அம்மனுக்கு வழிபாடு நடத்தினர். மேலும், மழை வேண்டி வருண பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...