திருப்பூர்: சமையலர் பாப்பாள் விவகாரத்தில் அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட்ட அவினாசி ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சியை இடமாற்றம் செய்தும், சமையலர் பாப்பாளுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் ஆணையிட்டுள்ளது.
திருப்பூர்: சமையலர் பாப்பாள் விவகாரத்தில் அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட்ட அவினாசி ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சியை இடமாற்றம் செய்தும், சமையலர் பாப்பாளுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் ஆணையிட்டுள்ளது.
அவிநாசியை அடுத்த திருமலைக் கவுண்டன்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் (42) என்பவர் தலித் என்பதால், பள்ளியில் அவர் சமையல் செய்யக்கூடாது என்று ஒரு சாதி பிரிவினர் கடந்த 18-ம் தேதி பள்ளியில் நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, உள்ளூர் ஆதிக்க சாதியினரின் மிரட்டலுக்கு அடிபணிந்த அவினாசி ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, சமையலர் பாப்பாளை வேறு ஊருக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால், தான் இதே பள்ளியில் தான் பணியாற்றுவேன் என்று பாப்பாள் கூறினார்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி ஆகியோருக்கு தேசிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சம்மன் அனுப்பியது.
இந்த வழக்கில் தற்போது வரை ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் இன்று விசாரணை நடத்தியது.
அதில், சமையலர் பாப்பாளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட்ட அவினாசி ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.