நீலகிரி: உதகை அருகே காட்டெருமை தாக்கியதில் படுகாயம் அடைந்தவர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
நீலகிரி: உதகை அருகே காட்டெருமை தாக்கியதில் படுகாயம் அடைந்தவர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகளின் புகழிடமாக இருந்து வரும் நிலையில், தண்ணீர் மற்றும் உணவு தேடி அவை ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு வரும் வனவிலங்குகள் பயிர்கள் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்துவதால், அதை விரட்ட மனிதர்கள் முற்படும் போது, மனித வனவிலங்குகள் மோதல் ஏற்பட்டு, உயிர்சேதம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், உதகையை அடுத்த கொல்லிமலை கிராமத்தில் வசித்து வருபவர் பாலசுப்ரமணியம் (60). இவர், இன்று தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். மீண்டும் மதிய உணவை முடித்து விட்டு, வேலைக்கு செல்லும் போது அங்கு உலா வந்த காட்டெருமை இவரை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த பாலசுப்ரமணியத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பரிந்துரைத்ததால், அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகளின் புகழிடமாக இருந்து வரும் நிலையில், தண்ணீர் மற்றும் உணவு தேடி அவை ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு வரும் வனவிலங்குகள் பயிர்கள் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்துவதால், அதை விரட்ட மனிதர்கள் முற்படும் போது, மனித வனவிலங்குகள் மோதல் ஏற்பட்டு, உயிர்சேதம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், உதகையை அடுத்த கொல்லிமலை கிராமத்தில் வசித்து வருபவர் பாலசுப்ரமணியம் (60). இவர், இன்று தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். மீண்டும் மதிய உணவை முடித்து விட்டு, வேலைக்கு செல்லும் போது அங்கு உலா வந்த காட்டெருமை இவரை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த பாலசுப்ரமணியத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பரிந்துரைத்ததால், அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.