திருப்பூர்: தி.மு.க.. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து வதந்தி பரவிய காரணத்தால், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் குறைந்த அளவிலான மக்களே கலந்து கொண்டனர்.
திருப்பூர்: தி.மு.க.. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து வதந்தி பரவிய காரணத்தால், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் குறைந்த அளவிலான மக்களே கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில், மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள், தங்கள் குறைகளை தெரிவிப்பது வழக்கம். இன்றும் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வந்த வண்ணமுள்ளன. இதன் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தின் புற பகுதிகளிலிருந்து மக்கள் அதிகளவில் வராத காரணத்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் குறைந்த அளவிலான கூட்டமே காணப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில், மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள், தங்கள் குறைகளை தெரிவிப்பது வழக்கம். இன்றும் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வந்த வண்ணமுள்ளன. இதன் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தின் புற பகுதிகளிலிருந்து மக்கள் அதிகளவில் வராத காரணத்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் குறைந்த அளவிலான கூட்டமே காணப்பட்டது.