நீலகிரி: நெல்லியாளம் நகராட்சியில் பணி புரியும் ஒப்பந்தத் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக பணி வழங்கவில்லை என்று கூறி இன்று பணியாளர்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நீலகிரி: நெல்லியாளம் நகராட்சியில் பணி புரியும் ஒப்பந்தத் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக பணி வழங்கவில்லை என்று கூறி இன்று பணியாளர்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெல்லியாளம் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 28 பேர் ஒப்பந்தத் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
கூடலூரைச் சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதில்லை, வருங்கால வைப்பு நிதி மற்றும் மருத்துவ காப்பீடு எதையும் முறையாக வழங்குவதில்லை என பல முறை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்ததாகக் கூறும் இவர்கள், கடந்த 4 மாதங்களாக 28 பேருக்கும் பணி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுவதாகவும் கூறி இன்று தங்களது குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் நோக்கில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து, அவர்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் வரும் 1-ம் தேதி முதல் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அவர்கள் திரும்பி சென்றனர்.
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெல்லியாளம் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 28 பேர் ஒப்பந்தத் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
கூடலூரைச் சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதில்லை, வருங்கால வைப்பு நிதி மற்றும் மருத்துவ காப்பீடு எதையும் முறையாக வழங்குவதில்லை என பல முறை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்ததாகக் கூறும் இவர்கள், கடந்த 4 மாதங்களாக 28 பேருக்கும் பணி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுவதாகவும் கூறி இன்று தங்களது குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் நோக்கில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து, அவர்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் வரும் 1-ம் தேதி முதல் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அவர்கள் திரும்பி சென்றனர்.