நிறைவடைந்தது கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா : கடந்த ஆண்டை விட விற்பனை அதிகம்

கோவை: கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வாசகர் கூட்டம் அலை மோதியது. பல தரப்பட்ட வாசகர்களும் விரும்பிய நூல்களை பெருமளவில் வாங்கிச் சென்றனர்.


கோவை: கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வாசகர் கூட்டம் அலை மோதியது. பல தரப்பட்ட வாசகர்களும் விரும்பிய நூல்களை பெருமளவில் வாங்கிச் சென்றனர்.

கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் 265 ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன. தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளைச் சேர்ந்த நூல்களும் இந்த இடம் பெற்றிருந்தன. புத்தகக் கண்காட்சியை ஒட்டி இலக்கியப் பதிப்பகங்கள் ஏராளமான புதிய நூல்களை வெளியிட்டிருந்தன. 

பத்து நாட்களும் அறிவுக்கேணி, இலக்கியக்கூடல், தொழிலாளர் நிகழ்ச்சிகள், வாசகர் சந்திப்புகள்,நூல் வெளியீடுகள் என இலக்கியத் திருவிழாவாகவே காட்சியளித்தது கொடிசியா தொழிற்காட்சி வளாகம்.

கடந்த ஆண்டை விட அதிகம் வாசகர்கள் பார்வையிட்டு, விற்பனையும் அதிகம் இருந்ததாக பதிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

நிறைவு விழாவில் பேசிய கொடிசியா புத்தகத் திருவிழா தலைவர் எஸ்.செளந்தரராஜன், "2019-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா ஜூலை 19 முதல் ஜூலை 28 முதல் நடைபெறும். இந்த ஆண்டை விட அதிகம் ஸ்டால்கள் இடம்பெறும் நிகழ்வாக அடுத்த புத்தகத் திருவிழா இருக்கும். உலகளவில் முக்கியமான புத்தகத் திருவிழாவாக கொடிசியா புத்தகத் திருவிழா நிச்சயம் இடம் பிடிக்கும்." என்று தெரிவித்தார்.

நிறைவு விழாவில் நன்னெறிக் கழகத்தின் தலைவர் இயகோகா சுப்ரமணியம், இலக்கியக்கூடல் தலைவர் டி. பாலசுந்தரம், புத்தகத் திருவிழா துணைத்தலைவர் விஜய் ஆனந்த், அறிவுக்கேணித் தலைவர் ஈ.கே.பொன்னுசாமி, டைனமிக் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

புத்தகக் கண்காட்சியின் நான்காவது பதிப்பை பார்க்க...

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...