ஆமை வேகத்தில் நடைபெறும் காரமடை ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைந்து முடிக்கக் கோரிக்கை

கோவை: ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் காரமடை ரயில்வே மேம்பால பணிகளால் சுமார் மூன்றரை ஆண்டுகளாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை: ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் காரமடை ரயில்வே மேம்பால பணிகளால் சுமார் மூன்றரை ஆண்டுகளாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு எட்டு முறை தினந்தோறும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்பாதை காரமடையில் கோவை சாலையின் நடுவே செல்வதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.33.75 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.



பாலம் 12 மீ அகலத்தில் 524 நீளத்தில் 16 பில்லர்களும் இரு பக்கம் அபர்மென்ட் சுவர்களும் அமையும் படி வடிவமைக்கப்பட்டது. ஆனால், கொடுக்கப்பட்ட காலக் கெடு முடிவடைந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை பால பணிகள் 60 சதவீத பணிகள் கூட முடிவடையாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் கோவை, நீலகிரி மாவட்டங்களை இனைக்கும் இந்த முக்கிய சாலைகளில் பயணிக்கும் சுற்றுலா வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றிவிட்டு மாற்றுப் பாதையில் சென்று வருகின்றனர். 

மேலும் மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கோவைக்குச் செல்லும் மாணவர்கள், தொழிலாளிகள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை செல்லும் போது அவசர சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலையின் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.



இருசக்கர வாகனம் செல்ல ரயில்வே கேட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்படத்தப்பட்ட சுரங்கப் பாதையிலும் மழைக்காலத்தில் 2 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி தேங்கி நிற்பதால் அதுவும் பயனற்று கிடக்கிறது. எனவே அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...