காவேரி மருத்துவமனையில் கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி

காவேரி மருத்துவமனை முன் கூடியிருந்த திமுக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனை முன் கூடியிருந்த திமுக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு இரு தினங்களுக்கு முன்பு, உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில்  தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து   காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது, தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும், இதயத்துடிப்பு, சுவாசக்கோளாறு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவு போன்ற காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டபோதிலும் தற்போது சீராக உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டது. கடந்த  44 மணி நேரமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து,  தீவிர மருத்துவ சிகிச்சையை அடுத்து முக்கிய செயல்பாடுகள் சீராகி வருவதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த மருத்துவ நிபுணர்கள் கருணாநிதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  மேலும், வதந்திகளை நம்ப வேண்டாம். மருத்துவர்கள் தொடர்ந்து கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வருவதாக  அவர் கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் மழையிலும் நின்று முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.  இதனிடையே, தி.மு.க., தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள சென்னை காவிரி மருத்துவமனையில் கலைந்து செல்லுமாறு அங்கு குவிந்துள்ள தொண்டர்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு  மறுத்த தொண்டர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டினர்.  இதனால், அங்கு பதட்டம் நிலவியது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...