கருணாநிதி உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ; காவேரி மருத்துவமனை அறிக்கை

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்னும் சற்று நேரத்தில் அறிக்கையை காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட உள்ள நிலையில், சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு இரு தினங்களுக்கு முன்பு, உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.



இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்று இரவு 9 மணியளவில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடல்நிலையில் மூன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது, தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும், இதயத்துடிப்பு, சுவாசக்கோளாறு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவு போன்ற காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இதனிடையே, சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலத்தில் நாளை நடைபெறவிருந்த அரசு நிகர்ச்சியை ரத்து செய்து, சென்னை புறப்பட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...