உலக புலிகள் தினம்: உதகையில் பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு புலியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு இன்று உதகையில் பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு புலியின் அவசியம் குறித்து காணொளி காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீலகிரி: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு இன்று உதகையில் பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு புலியின் அவசியம் குறித்து காணொளி காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. 

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்த புலிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வந்தது. இதனையடுத்து புலிகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் உலக புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.



இதனையொட்டி, இன்று உதகை கேர்ன்ஹில் வனப்பகுதியில் மாவட்ட வனத்துறை சார்பில் பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் புலிகளின் அவசியம் குறித்தும், புலி வனத்தில் ஏன் இருக்க வேண்டும்? என்பதை உணர்த்தும் வகையில் காணொளி காட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.



தற்போது இந்தியாவில் 2,226 புலிகள் உள்ளதாக கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாகவும், நீலகிரியில் 120 முதல் 130 புலிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தகவல் உள்ளதாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...