கருணாநிதியின் உடல் நிலையை நினைத்து உடுமலையில் தி.மு.க தொண்டர் மாரடைப்பால் மரணம்

உடுமலை: மடத்துக்குளம் அருகே பாப்பான்குளம் ஊராட்சியைச் சேர்ந்த தி.மு.க., தொண்டர், கட்சியின் தலைவரான கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாமல் போனதை நினைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்.


உடுமலை: மடத்துக்குளம் அருகே பாப்பான்குளம் ஊராட்சியைச் சேர்ந்த தி.மு.க., தொண்டர், கட்சியின் தலைவரான கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாமல் போனதை நினைத்து மாரடைப்பால் மரணமடைந்தார். 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சியைச் சேர்ந்தவர் சபரிகிரிநாதன் என்கின்ற செந்தில் (42). இவர் பாப்பான்குளம் ஊராட்சியின் 5-வது வார்டு தி.மு.க., பகுதி செயலாளராக இருந்தார்.



திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை. கடந்த இரண்டு நாட்களாக தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவரை பற்றிய கவலையில் ஆழ்ந்துள்ளார் செந்தில். மேலும், வீட்டில் தனது தலைவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்று தனது மனைவியிடம் புலம்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.



தற்போது அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு, கட்சித் தொண்டகள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...