சென்னை: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
சென்னை: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.
பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் வருகை தந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை நேரில் சந்தித்த அவர்கள், கருணாநிதியின் உடல் நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தனர்.