கோவை அரசு பேருந்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகை கடத்தல் : ஒருவர் கைது

கோவை: கோவையில் இருந்து பாலக்காடு சென்ற அரசு பேருந்தில் பயணித்த வாலிபரிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவையில் இருந்து பாலக்காடு சென்ற அரசு பேருந்தில் பயணித்த வாலிபரிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள வாளையார் சோதனை சாவடியில் கேரள காவல்துறை ஆய்வாளர் சசிதரன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கிச் சென்ற தமிழக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

பேருந்தில் பயணித்த ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த மகேந்திரகுமார் (31), என்பவரை பரிசோதித்ததில், அவரிடம் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ எடை கொண்ட வைர நகைகள் இருந்தது தெரியவந்தது.

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட, வைரங்களும், நகைகளும் கோவைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்டதும், இங்கிருந்து கேரளாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு செல்லப்படுவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மகேந்திரகுமாரிடமிருந்து வைரங்களை ஒப்படைக்க வேண்டிய நிறுவனங்களின் பெயர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வைரங்களை அவரிடம் ஒப்படைத்த நபர் யார்? கோவை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையை மீறி வைர நகைகள் கடத்தப்பட்டது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...