கோவை: கோவையில் இருந்து பாலக்காடு சென்ற அரசு பேருந்தில் பயணித்த வாலிபரிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் இருந்து பாலக்காடு சென்ற அரசு பேருந்தில் பயணித்த வாலிபரிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள வாளையார் சோதனை சாவடியில் கேரள காவல்துறை ஆய்வாளர் சசிதரன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கிச் சென்ற தமிழக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
பேருந்தில் பயணித்த ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த மகேந்திரகுமார் (31), என்பவரை பரிசோதித்ததில், அவரிடம் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ எடை கொண்ட வைர நகைகள் இருந்தது தெரியவந்தது.
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட, வைரங்களும், நகைகளும் கோவைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்டதும், இங்கிருந்து கேரளாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு செல்லப்படுவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மகேந்திரகுமாரிடமிருந்து வைரங்களை ஒப்படைக்க வேண்டிய நிறுவனங்களின் பெயர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வைரங்களை அவரிடம் ஒப்படைத்த நபர் யார்? கோவை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையை மீறி வைர நகைகள் கடத்தப்பட்டது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள வாளையார் சோதனை சாவடியில் கேரள காவல்துறை ஆய்வாளர் சசிதரன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கிச் சென்ற தமிழக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
பேருந்தில் பயணித்த ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த மகேந்திரகுமார் (31), என்பவரை பரிசோதித்ததில், அவரிடம் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ எடை கொண்ட வைர நகைகள் இருந்தது தெரியவந்தது.
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட, வைரங்களும், நகைகளும் கோவைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்டதும், இங்கிருந்து கேரளாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு செல்லப்படுவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மகேந்திரகுமாரிடமிருந்து வைரங்களை ஒப்படைக்க வேண்டிய நிறுவனங்களின் பெயர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வைரங்களை அவரிடம் ஒப்படைத்த நபர் யார்? கோவை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையை மீறி வைர நகைகள் கடத்தப்பட்டது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.