கோவை: வால்பாறையில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அம்மன் தாலி மற்றும் உண்டியல் பணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வால்பாறையில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அம்மன் தாலி மற்றும் உண்டியல் பணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூட்டைத் திறந்து நேற்று இரவு உள்ளே சென்ற மர்ம நபர்கள் அம்மனுக்கு அணிவித்திருந்த தாலி, வெள்ளி கிரீடம் மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
மேலும், கோவிலின் அருகே உள்ள ஹோமியோபதி கிளினிக்-க்குள் புகுந்து அங்கிருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். காலையில் கோவில் பூசாரி வந்து பார்க்கும் போது, இக்கொள்ளைச் சம்பவம் நடந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக, வால்பாறை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், அங்கு சென்ற போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி காமிரா காட்சிகளைப் பார்வையிட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த, காமிராவில் அங்கு இரண்டு சிறுத்தை புலிகள் நடமாடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.