கோவை: கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது :- கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளது. இதனிடையே, பகல்நேர வெப்ப நிலையானது 30 முதல் 31 டிகிரி செல்சியஸ்யாகவும், இரவு நேர வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாக 20 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வந்த காற்றின் வேகம், இந்த வாரம் சற்று குறைந்து 10 முதல் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது. கோவை புறநகர் பகுதியான காரமடை, கிணத்துக்கடவு பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம், என்றார்.
இது குறித்து அவர் கூறியதாவது :- கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளது. இதனிடையே, பகல்நேர வெப்ப நிலையானது 30 முதல் 31 டிகிரி செல்சியஸ்யாகவும், இரவு நேர வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாக 20 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வந்த காற்றின் வேகம், இந்த வாரம் சற்று குறைந்து 10 முதல் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது. கோவை புறநகர் பகுதியான காரமடை, கிணத்துக்கடவு பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம், என்றார்.