உதகையில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

நீலகிரி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு உதகை நகராட்சி ரூ. 22,000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

நீலகிரி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு உதகை நகராட்சி ரூ. 22,000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக்கை கொண்டுள்ள டம்ளர், தட்டுகள் போன்றவற்றிற்கு தடை செய்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். இதனால், மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வியாபார நிறுவனங்கள் மற்றும் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து சோதனை நடத்தி, அபராதம் விதித்து வந்தது.

இந்நிலையில், உதகை நகரில் இன்று நகராட்சி ஆணையாளர் ரவி (பொறுப்பு) தலைமையில் அதிகாரிகள் பிளாஸ்டிக் தடுப்பு சோதனையை நடத்தினர். அப்போது, இதில், பல வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தடையை மீறி பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். 



இன்று நடைபெற்ற இந்த சோதனையில் சுமார் ரூ. 22,000 அபராதம் வசூலிக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...