தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மருத்துவ உதவி கோரப்பட்டால், அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மருத்துவ உதவி கோரப்பட்டால், அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமானதால், அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது ரத்த அழுத்தம் சீரடைந்து உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி உடல்நலம் தேர வேண்டும் என தி.மு.க., தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மருத்துவ உதவி கோரப்பட்டால், அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், "காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி குணமடைந்து வருகிறார். மருத்துவ உதவி கேட்டால், அரசு உதவ தயாராக இருக்கிறோம். நீட் தேவையில்லை என்பதே தமிழக அரசின் கருத்து. எனினும், உச்சநீதிமன்ற தீர்ப்பால் நீட்டை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, இவ்வாறு கூறினார்.
இதனிடையே, கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களுக்கு தி.மு.க., எம்.பி., கனிமொழி விளக்கம் அளித்திருப்பதாவது :- கருணாநிதிக்கு ஏற்பட்ட ரத்த அழுத்தக் குறைவு தற்போது சீராகி விட்டது. நேற்று இரவு ரத்த அழுத்தம் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இன்று அது இயல்பு நிலைக்கு வந்துள்ளது. தற்போது கருணாநிதி நலமாக உள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறார்கள், என்றார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமானதால், அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது ரத்த அழுத்தம் சீரடைந்து உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி உடல்நலம் தேர வேண்டும் என தி.மு.க., தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மருத்துவ உதவி கோரப்பட்டால், அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், "காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி குணமடைந்து வருகிறார். மருத்துவ உதவி கேட்டால், அரசு உதவ தயாராக இருக்கிறோம். நீட் தேவையில்லை என்பதே தமிழக அரசின் கருத்து. எனினும், உச்சநீதிமன்ற தீர்ப்பால் நீட்டை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, இவ்வாறு கூறினார்.
இதனிடையே, கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களுக்கு தி.மு.க., எம்.பி., கனிமொழி விளக்கம் அளித்திருப்பதாவது :- கருணாநிதிக்கு ஏற்பட்ட ரத்த அழுத்தக் குறைவு தற்போது சீராகி விட்டது. நேற்று இரவு ரத்த அழுத்தம் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இன்று அது இயல்பு நிலைக்கு வந்துள்ளது. தற்போது கருணாநிதி நலமாக உள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறார்கள், என்றார்.