கருணாநிதியின் உடல்நலம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் ; ஸ்டாலின்

கருணாநிதியின் உடல்நலம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கருணாநிதியின் உடல்நலம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:- தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று பின்னிரவில் சற்று நலிவை சந்தித்தது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கோபாலபுரம் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். கருணாநிதி பூரண நலம் பெற வேண்டும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துச் செய்திகளையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிற்பகலுக்கு பின்னர் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் சிறுநீரகத்தொற்று படிப்படியாகக் குறைந்து வருவதாக மருவத்துவர்கள் குறிப்பிட்டனர். இதனிடையே, இன்று மாலையில் சமூக வலைதளங்களில் கருணாநிதியைப் பற்றி விரும்பத்தகாத சில தகவல்கள் வதந்திகளாக உலா வந்தன. இதனைத் தொடர்ந்து, வதந்திகளை நம்ப வேண்டாம், 





கருணாநிதிக்கு 24 மணிநேரமும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அவரை சந்திக்க வருவதை பொதுமக்களும், தொண்டர்களும் தவிர்க்க வேண்டும், இவ்வாறு தமிழக மக்களை தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.





Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...