உதகையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

நீலகிரி : தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் ஐ.எஸ். இன்பதுரை தலைமையில் உதகையில் இன்று அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி : தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் ஐ.எஸ். இன்பதுரை தலைமையில் உதகையில் இன்று அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் ஐ.எஸ்., இன்பதுரை தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது, இன்பதுரை பேசியதாவது :- ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக சட்டமன்றம் திகழ்கிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது பல்வேறு அரசு துறைகளின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட 69 கேள்விகள் விவாதிக்கப்பட்டது. 

அதில், 31 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இக்குழுக்கள் அதிகாரமிக்க குழுக்களில் ஒன்று. இக்குழு தமிழ்நாடு முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சட்டமன்றத்தில் அமைச்சர்கள் அறிவிக்கப்படும் உறுதிமொழிகள் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு அவை அறிக்கையாகக் கொடுக்கப்பட்டு சட்டப்பேரவைக்கு அளிக்கப்படும்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து துறைகளின் செயல்பாடுகளும், திட்டங்களும் எந்த நிலையில் உள்ளது. நிலுவையில் உள்ள திட்டங்கள், மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்கள், வளர்ச்சிப்பணிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறும், அரசு அறிவிக்கும் மக்களுக்கான அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் .எந்தவித தொய்வுமின்றி அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும், என்றார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...