கோவை: கோவையில் முதல்நிலை காவலர் ஒருவர் மன நோயாளியை சுத்தப்படுத்தி புத்தாடை அணிவித்த சம்பவம் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
கோவை: கோவையில் முதல்நிலை காவலர் ஒருவர் மன நோயாளியை சுத்தப்படுத்தி புத்தாடை அணிவித்த சம்பவம்
நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
செல்வபுரம் டி-2 காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிபவர் பிரதீப். இவர் பேரூர் ரோடு வாய்க்காப்பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியருகே பணியில் இருந்த போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார்.
அந்த நபரை, சுத்தம் செய்து, முடிதிருத்தி அவரை அன்போடு கவனித்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதே காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலர் ஒருவர் மது போதையில் பொது மக்களுக்கு இடையூறாக வாகனத்தை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

அதேபோல், காவலர்கள் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த தொடர் சம்பவங்கள், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள அன்புள்ளம் கொண்ட காவலரின் மேன்மை மிக்க செயல்பாடு செல்வபுரம் பகுதி மக்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கோவை மக்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
செல்வபுரம் டி-2 காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிபவர் பிரதீப். இவர் பேரூர் ரோடு வாய்க்காப்பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியருகே பணியில் இருந்த போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார்.
அந்த நபரை, சுத்தம் செய்து, முடிதிருத்தி அவரை அன்போடு கவனித்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதே காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலர் ஒருவர் மது போதையில் பொது மக்களுக்கு இடையூறாக வாகனத்தை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

அதேபோல், காவலர்கள் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த தொடர் சம்பவங்கள், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள அன்புள்ளம் கொண்ட காவலரின் மேன்மை மிக்க செயல்பாடு செல்வபுரம் பகுதி மக்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கோவை மக்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.