கோவை : மும்பையில் பிரபல உணவு முறையான 'டப்பாவாலா' குறித்த கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது.
கோவை: மும்பையில் பிரபல உணவு முறையான 'டப்பாவாலா' குறித்த கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது.
அவினாசி சாலையில் உள்ள ஓட்டல் ரெசிடென்சியில் எப்.ஐ.சி.சி.ஐ., மகளிர் அமைப்பின் சார்பில் 'மும்பை டப்பாவாலா விநியோகச் சங்கிலி மேலாண்மை' என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக சர்வதேச எழுச்சிமிகு பேச்சாளர் பவன் அகர்வால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், எப்.எல்.ஓ., கோவையின் தலைவர் ஜெயந்தி மனோகர் கலந்து கொண்டு, இந்தக் கருத்தரங்கு பற்றியும், ஹார்டுவார்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வின் அடிப்படையில் பவன் அகர்வால் மேற்கொண்டு வரும் மும்பை டப்பாவாலாவின் ஆராய்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து, பேச்சாளர் பவன் அகர்வால் பேசுகையில்," புறநகர் ரயில்களில் தொலைதூரம் பயணித்து பணிக்கு செல்பவர்களுக்கு, அவர்களது வீடுகளில் நேரமாக எழுந்து உணவு தயார் செய்து கொடுப்பது என்பது முடியாத காரியம்.

எனவே, இது போன்ற பணிகளுக்கு செல்பவர்களுக்கு டப்பாவாலாக்கள் மிகவும் உதவிக்கரமாக இருக்கின்றனர். 5,000-க்கும் மேற்பட்ட டப்பாவாலாக்கள் நாள்தோறும் 8 முதல் 9 மணிநேரம் தொடர்ந்து பணியாற்றுகின்றனர். குறைந்தபட்சம் 60 முதல் 70 கி.மீ., தொலைவு பயணம் செய்கின்றனர். புறநகர் ரயில்களில் குறைந்தது 2 லட்சம் டிபன் பாக்ஸுகள் புழக்கத்தில் இருக்கும். 8-வது வரை படித்துள்ள டப்பாவாலாவே சராசரியாக மாதம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை சம்பாதிக்கின்றனர்," இவ்வாறு அவர் கூறினார்.
அவினாசி சாலையில் உள்ள ஓட்டல் ரெசிடென்சியில் எப்.ஐ.சி.சி.ஐ., மகளிர் அமைப்பின் சார்பில் 'மும்பை டப்பாவாலா விநியோகச் சங்கிலி மேலாண்மை' என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக சர்வதேச எழுச்சிமிகு பேச்சாளர் பவன் அகர்வால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், எப்.எல்.ஓ., கோவையின் தலைவர் ஜெயந்தி மனோகர் கலந்து கொண்டு, இந்தக் கருத்தரங்கு பற்றியும், ஹார்டுவார்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வின் அடிப்படையில் பவன் அகர்வால் மேற்கொண்டு வரும் மும்பை டப்பாவாலாவின் ஆராய்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து, பேச்சாளர் பவன் அகர்வால் பேசுகையில்," புறநகர் ரயில்களில் தொலைதூரம் பயணித்து பணிக்கு செல்பவர்களுக்கு, அவர்களது வீடுகளில் நேரமாக எழுந்து உணவு தயார் செய்து கொடுப்பது என்பது முடியாத காரியம்.

எனவே, இது போன்ற பணிகளுக்கு செல்பவர்களுக்கு டப்பாவாலாக்கள் மிகவும் உதவிக்கரமாக இருக்கின்றனர். 5,000-க்கும் மேற்பட்ட டப்பாவாலாக்கள் நாள்தோறும் 8 முதல் 9 மணிநேரம் தொடர்ந்து பணியாற்றுகின்றனர். குறைந்தபட்சம் 60 முதல் 70 கி.மீ., தொலைவு பயணம் செய்கின்றனர். புறநகர் ரயில்களில் குறைந்தது 2 லட்சம் டிபன் பாக்ஸுகள் புழக்கத்தில் இருக்கும். 8-வது வரை படித்துள்ள டப்பாவாலாவே சராசரியாக மாதம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை சம்பாதிக்கின்றனர்," இவ்வாறு அவர் கூறினார்.