மும்பையில் பிரபலமான 'டப்பாவாலா' குறித்து கோவையில் கருத்தரங்கு

கோவை : மும்பையில் பிரபல உணவு முறையான 'டப்பாவாலா' குறித்த கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது.

கோவை:  மும்பையில் பிரபல உணவு முறையான 'டப்பாவாலா' குறித்த கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது. 

அவினாசி சாலையில் உள்ள ஓட்டல் ரெசிடென்சியில் எப்.ஐ.சி.சி.ஐ., மகளிர் அமைப்பின் சார்பில் 'மும்பை டப்பாவாலா விநியோகச் சங்கிலி மேலாண்மை' என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக சர்வதேச எழுச்சிமிகு பேச்சாளர் பவன் அகர்வால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், எப்.எல்.ஓ., கோவையின் தலைவர் ஜெயந்தி மனோகர் கலந்து கொண்டு, இந்தக் கருத்தரங்கு பற்றியும், ஹார்டுவார்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வின் அடிப்படையில் பவன் அகர்வால் மேற்கொண்டு வரும் மும்பை டப்பாவாலாவின் ஆராய்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார். 



இதைத் தொடர்ந்து, பேச்சாளர் பவன் அகர்வால் பேசுகையில்," புறநகர் ரயில்களில் தொலைதூரம் பயணித்து பணிக்கு செல்பவர்களுக்கு, அவர்களது வீடுகளில் நேரமாக எழுந்து உணவு தயார் செய்து கொடுப்பது என்பது முடியாத காரியம். 



எனவே, இது போன்ற பணிகளுக்கு செல்பவர்களுக்கு டப்பாவாலாக்கள் மிகவும் உதவிக்கரமாக இருக்கின்றனர். 5,000-க்கும் மேற்பட்ட டப்பாவாலாக்கள் நாள்தோறும் 8 முதல் 9 மணிநேரம் தொடர்ந்து பணியாற்றுகின்றனர். குறைந்தபட்சம் 60 முதல் 70 கி.மீ., தொலைவு பயணம் செய்கின்றனர். புறநகர் ரயில்களில் குறைந்தது 2 லட்சம் டிபன் பாக்ஸுகள் புழக்கத்தில் இருக்கும். 8-வது வரை படித்துள்ள டப்பாவாலாவே சராசரியாக மாதம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை சம்பாதிக்கின்றனர்," இவ்வாறு அவர் கூறினார். 

 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...