சூயஸ் நிறுவனம் கோவையை தேர்வு செய்ய அணைகளே முக்கியக் காரணம் : கோவையில் ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி

மாநகராட்சியின் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு கோவையை சூயஸ் நிறுவனம் தேர்வு செய்ததற்கு அணைகளே முக்கியக் காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



மாநகராட்சியின் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு கோவையை சூயஸ் நிறுவனம்  தேர்வு செய்ததற்கு அணைகளே முக்கியக் காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியார்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- மின்சாரம், பெட்ரோல் போல கோவை மாநகராட்சியில் குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டுமென்பது ஏற்புடையது அல்ல. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மேலும், சூயஸ் நிறுவனம் கோவையை தேர்ந்தெடுக்கக் கோவை சுற்றுவட்டாரத்தில் 11 அணைகள் இருப்பதே காரணம். 24 மணிநேர குடிநீர் விநியோகம் என்பது மக்களை ஏமாற்றும் செயல். 

சூயஸ் நிறுவனமே குடிநீர் கட்டணத்தை தீர்மானிக்கும் என்பதை மாநகராட்சி மறைக்கிறது. வீட்டின் பரப்பளவிற்கு ஏற்ப குடிநீர் கட்டணம், பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைக்கக் கூடாது என்ற சூயஸ் நிறுவனத்தின் நிபந்தனையைச் செயல்படுத்த முயல்கிறது. குடிநீரை வணிகமாக்குவதை ஏற்க முடியாது. சூயஸ் குடிநீர் திட்டத்தில் எவ்வளவு அடக்குமுறை இருந்தாலும் எதிர்த்து முறியடிப்போம். சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் கொள்கை, திட்டங்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை கைது செய்வது ஜனநாயக விரோதமானது. 

துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காதது தவறு. தனியாருக்கு ராணுவ விமானத்தைப் பயன்படுத்த அனுமதித்ததும் தவறு. அரசியல் நோக்கத்திற்காக மத்திய அரசு வருமான வரித்துறை சோதனைகளை நடத்துகிறது. சத்துணவு பணியாளர்கள் முதல் துணைவேந்தர் நியமனம் வரை ஊழல் நடைபெறுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...