வால்பாறை: வால்பாறை அருகே கோவில் மற்றும் ரேசன் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகளால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை: வால்பாறை அருகே கோவில் மற்றும் ரேசன் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகளால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது. இதனால், மனித - விலங்குகளின் மோதல் அதிகளவில் ஏற்படுகிறது. எனவே, அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், வால்பாறை அருகே உள்ள மாணிக்கா எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்துள்ளன. அங்குள்ள கோவில் கதவை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தின. தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை சேதப்படுத்திய காட்டு யானைகள், டீ கடையை உடைத்து, உள்ளே இருந்த பொருட்களை நாசமாக்கின.

பின்னர், மாணிக்கா எஸ்டேட் ரேசன் கடையை உடைத்து, ஒரு மூட்டை பருப்பை தின்று பசியாற்றிக் கொண்டன. அதோடு, மாணிக்கா எஸ்டேட் மஸ்ட்ரூல் கதவு, ஜன்னல்களை உடைத்தன. இதைத் தொடர்ந்து, எஸ்டேட் பொதுமக்கள் ஒன்றுகூடி, காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

இதேபோல, பன்னிமேடு எஸ்டேட், காஞ்சமலை எஸ்டேட், சின்கோனா எஸ்டேட், பாரளை எஸ்டேட் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து, காட்டு யானையைக் காட்டுக்குள் விரட்ட வனத்துறையினருக்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது. இதனால், மனித - விலங்குகளின் மோதல் அதிகளவில் ஏற்படுகிறது. எனவே, அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், வால்பாறை அருகே உள்ள மாணிக்கா எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்துள்ளன. அங்குள்ள கோவில் கதவை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தின. தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை சேதப்படுத்திய காட்டு யானைகள், டீ கடையை உடைத்து, உள்ளே இருந்த பொருட்களை நாசமாக்கின.

பின்னர், மாணிக்கா எஸ்டேட் ரேசன் கடையை உடைத்து, ஒரு மூட்டை பருப்பை தின்று பசியாற்றிக் கொண்டன. அதோடு, மாணிக்கா எஸ்டேட் மஸ்ட்ரூல் கதவு, ஜன்னல்களை உடைத்தன. இதைத் தொடர்ந்து, எஸ்டேட் பொதுமக்கள் ஒன்றுகூடி, காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

இதேபோல, பன்னிமேடு எஸ்டேட், காஞ்சமலை எஸ்டேட், சின்கோனா எஸ்டேட், பாரளை எஸ்டேட் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து, காட்டு யானையைக் காட்டுக்குள் விரட்ட வனத்துறையினருக்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
