நீலகிரி: ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் பதுங்கிய சிறுத்தை, இருவரை தாக்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.
நீலகிரி: ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் பதுங்கிய சிறுத்தை, இருவரை தாக்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே துானேரி கிராமம் உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டங்களில், பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பீமன் என்பவர், அறுவடைக்கு தயாரான இலையை பறிக்க, தேவாலா பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், ஆறு பேரை அழைத்து வந்து இலை பறிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.

நேற்று (ஜூலை 25-ம்) மதியம், 1 மணியளவில் வேல்முருகன் (38) என்பவர் இலை பறித்து கொண்டிருந்தபோது, தேயிலை செடிகளுக்கு இடையே மறைந்திருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து, அவரை தாக்கியது. இதில் அவருக்கு நெற்றி மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டது.
வேல்முருகனின் அலறல் சப்தத்தை கேட்டு, அருகில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சிறுத்தை ஓடியது. பலத்த காயமடைந்த வேல்முருகனை, துானேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று, முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, உதவி வன பாதுகாவலர் சரவணன் தலைமையில், வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியை ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை, வனத்துறை ஊழியர் திருமூர்த்தி, (45) என்பவரை தாக்கியது. இதில் அவரது தலை, முதுகில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவருக்கு, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அந்த பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க அந்த பகுதியில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்த பகுதியிலுள்ள விவசாய நிலங்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்." என்றனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக நீலகிரி மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் கூறுகையில், ''சம்பவம் நடந்த இடத்தில், ஒரு கூண்டு வைக்கப்பட்டு, சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை.'' என்றார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே துானேரி கிராமம் உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டங்களில், பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பீமன் என்பவர், அறுவடைக்கு தயாரான இலையை பறிக்க, தேவாலா பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், ஆறு பேரை அழைத்து வந்து இலை பறிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.

நேற்று (ஜூலை 25-ம்) மதியம், 1 மணியளவில் வேல்முருகன் (38) என்பவர் இலை பறித்து கொண்டிருந்தபோது, தேயிலை செடிகளுக்கு இடையே மறைந்திருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து, அவரை தாக்கியது. இதில் அவருக்கு நெற்றி மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டது.
வேல்முருகனின் அலறல் சப்தத்தை கேட்டு, அருகில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சிறுத்தை ஓடியது. பலத்த காயமடைந்த வேல்முருகனை, துானேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று, முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, உதவி வன பாதுகாவலர் சரவணன் தலைமையில், வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியை ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை, வனத்துறை ஊழியர் திருமூர்த்தி, (45) என்பவரை தாக்கியது. இதில் அவரது தலை, முதுகில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவருக்கு, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அந்த பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க அந்த பகுதியில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்த பகுதியிலுள்ள விவசாய நிலங்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்." என்றனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக நீலகிரி மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் கூறுகையில், ''சம்பவம் நடந்த இடத்தில், ஒரு கூண்டு வைக்கப்பட்டு, சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை.'' என்றார்.
