அரசு பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவம் படிக்கும் இறுதியாண்டு கட்டாய சுழற்சி முறை உள்ளிருப்பு பயிற்சி மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவர் அல்லாத முதுநிலை பட்டம் மற்றும் பட்டயம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஊக்கத்தொகையானது, உள்ளிருப்பு பயிற்சி மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயாகவும், முதலாம் ஆண்டு முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்களுக்கு ரூ. 35,000 ஆகவும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.37,500 ஆகவும், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.35,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் ரூ.35,000 ஆகவும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.37,500 ஆகவும், முதலாம் ஆண்டு படிக்கும் உயர் மருத்துவ மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரமாகவும், 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.43,500 ஆகவும், 3,4,5,6-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, ரூ.45 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...