அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவம் படிக்கும் இறுதியாண்டு கட்டாய சுழற்சி முறை உள்ளிருப்பு பயிற்சி மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவர் அல்லாத முதுநிலை பட்டம் மற்றும் பட்டயம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஊக்கத்தொகையானது, உள்ளிருப்பு பயிற்சி மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயாகவும், முதலாம் ஆண்டு முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்களுக்கு ரூ. 35,000 ஆகவும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.37,500 ஆகவும், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.35,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் ரூ.35,000 ஆகவும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.37,500 ஆகவும், முதலாம் ஆண்டு படிக்கும் உயர் மருத்துவ மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரமாகவும், 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.43,500 ஆகவும், 3,4,5,6-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, ரூ.45 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவம் படிக்கும் இறுதியாண்டு கட்டாய சுழற்சி முறை உள்ளிருப்பு பயிற்சி மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவர் அல்லாத முதுநிலை பட்டம் மற்றும் பட்டயம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஊக்கத்தொகையானது, உள்ளிருப்பு பயிற்சி மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயாகவும், முதலாம் ஆண்டு முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்களுக்கு ரூ. 35,000 ஆகவும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.37,500 ஆகவும், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.35,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் ரூ.35,000 ஆகவும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.37,500 ஆகவும், முதலாம் ஆண்டு படிக்கும் உயர் மருத்துவ மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரமாகவும், 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.43,500 ஆகவும், 3,4,5,6-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, ரூ.45 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.