பேரூர் கோவிலுக்குள் நுழைந்து பெண் ஒருவரை கைது செய்த போலீசார்

கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குள் சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீபிரியா என்ற பெண்ணை திடீரென போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குள் சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீபிரியா என்ற பெண்ணை திடீரென போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் மகேஷ் ஸ்ரீனிவாசன்(45). இவரது மனைவி ஸ்ரீபிரியா (42). மகேஷ் ஸ்ரீனிவாசன் பல்வேறு நபர்களிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு குடும்பத்தை விட்டுவிட்டு தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத காரணத்தால் இவரது குடும்பத்திற்கு அடிக்கடி மிரட்டல்களும் காவல் துறையினரால் கைது நடவடிக்கைகளும் நடப்பதாக கூறப்படுகிறது.

இதில் கடந்த ஜூன் மாதம் முத்து கிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஸ்ரீபிரியாவை கைது செய்தனர். பின்னர் விசாரணை செய்து விட்டு விட்டதாகவும், மீண்டும் போலீசார் கைது நடவடிக்கைக்கு தயாராகும் போது அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஸ்ரீபிரியாவுக்கு எதிரான வழக்கை போலீசார் முடித்துக் கொண்டதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்தசூழலில், இன்று காலை சுமார் ஏழு மணிக்கு பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற ஸ்ரீப்ரியாவையும் அவரது ஓட்டுநர் குமாரரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவிலுக்குள் இருந்த பெண்ணை திடீரென போலீசார் கைது செய்த சம்பவம் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...