திருப்பூர்: 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறும் வகையில் திருமூா்த்தி அணையிலிருந்து வினாடிக்கு 912 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
உடுமலை: 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறும் வகையில் திருமூா்த்தி அணையிலிருந்து வினாடிக்கு 912 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம் உடுமலை திருமூா்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது, அணையில் 56.81 அடி நீர்மட்டம் உள்ளது. திருமூா்த்தி அணைக்கு பரம்பிகுளம் அணையிலிருந்து கான்டூா் கால்வாய் வழியாக தண்ணீர் வருவது நிரப்புவது வழக்கம். தற்போது, தென்மேற்கு பருவமழை, வழக்கத்தைவிடக் கூடுதலாக பெய்ததால், பரம்பிகுளம் அணையிலிருந்து உபரி நீர் வினாடிக்கு 960 கனஅடி வீதம் திருமூா்த்தி அணைக்கு வருகிறது. இதனால், அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இந்த நிலையில், முதலாம் மண்டல பாசனத்தில் 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் செய்யும் வகையில், வினாடிக்கு 912 கனஅடி வீதம் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக அணையை கால்நடைதுறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூா் மாவட்டம் உடுமலை திருமூா்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது, அணையில் 56.81 அடி நீர்மட்டம் உள்ளது. திருமூா்த்தி அணைக்கு பரம்பிகுளம் அணையிலிருந்து கான்டூா் கால்வாய் வழியாக தண்ணீர் வருவது நிரப்புவது வழக்கம். தற்போது, தென்மேற்கு பருவமழை, வழக்கத்தைவிடக் கூடுதலாக பெய்ததால், பரம்பிகுளம் அணையிலிருந்து உபரி நீர் வினாடிக்கு 960 கனஅடி வீதம் திருமூா்த்தி அணைக்கு வருகிறது. இதனால், அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இந்த நிலையில், முதலாம் மண்டல பாசனத்தில் 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் செய்யும் வகையில், வினாடிக்கு 912 கனஅடி வீதம் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக அணையை கால்நடைதுறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
