கோவையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல்: தலை, கைகள் குளத்தில் மிதந்ததால் பரபரப்பு

கோவை: கோவையில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, குளத்தில் வீசப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவையில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, குளத்தில் வீசப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பனமரத்தூர் அருகே உள்ள செல்வாம்பதி குளம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது, பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக குளம் முழுவதும் நிறைந்துள்ளது. இந்நிலையில், குளத்தின் ஓரத்தில் தலை, கைகள் மற்றும் வயிற்றின் கீழ் பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில் பெண் உடல் கிடப்பதாக செல்வபுரம் போலிசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார் நீரில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல, கொலை செய்யப்பட்ட பெண்ணின் பிற உடல் பாகங்கள் சாக்கு மூட்டையில் குளத்தின் மற்றொரு பகுதியில் கண்டெடுத்தனர். உடலின் பாகங்களை வைத்துப் பார்க்கும் போது, கொலையான பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும் என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் யார்..? எந்த ஊரைச் சேர்ந்தவர்..? யார் அவரை கொலை செய்தது..? என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...