திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பல்லடம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பல்லடம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது வலசுப்பாளையம். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் வேண்டும் என்றால் கூட 5 கி.மீ தொலைவிற்குச் சென்றுதான் தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளதாகக் கூறினர். முறையான குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் பல்லடம் ஊராட்சி மன்ற அலுவலகத்தைக் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் தங்கள் பகுதிக்கு உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும் என பெண்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்லடம் ஊராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது வலசுப்பாளையம். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் வேண்டும் என்றால் கூட 5 கி.மீ தொலைவிற்குச் சென்றுதான் தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளதாகக் கூறினர். முறையான குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் பல்லடம் ஊராட்சி மன்ற அலுவலகத்தைக் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் தங்கள் பகுதிக்கு உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும் என பெண்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்லடம் ஊராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.