முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பல்லடம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பல்லடம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது வலசுப்பாளையம். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.

அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் வேண்டும் என்றால் கூட 5 கி.மீ தொலைவிற்குச் சென்றுதான் தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளதாகக் கூறினர். முறையான குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் பல்லடம் ஊராட்சி மன்ற அலுவலகத்தைக் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் தங்கள் பகுதிக்கு உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும் என பெண்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்லடம் ஊராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...