ரூ. 2 கோடி இழப்பை சந்திக்கும் மேட்டுப்பாளையம் உருளை கிழங்கு வர்த்தகம் : லாரி ஸ்டிரைக்கை வாபஸ் பெறக் கோரிக்கை

கோவை : லாரிகளின் தொடர் வேலை நிறுத்தத்தால் மேட்டுப்பாளையம் உருளை கிழங்கு வர்த்தகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதால், வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : லாரிகளின் தொடர் வேலை நிறுத்தத்தால் மேட்டுப்பாளையம் உருளை கிழங்கு வர்த்தகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதால், வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தென்னிந்தியாவில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உருளை கிழங்கு வர்த்தகம் முக்கியமானது. நீலகிரி மாவட்டம் கர்நாடகா, குஜராத், ஆக்ரா, நைனிடால், இந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 100 முதல் 120 லோடு உருளை கிழங்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட கிழங்கு மண்டிகளில் தொழிலாளர்கள் மூலம் தரம் பிரிக்கப்பட்டு 45 கிலோ மூட்டைகளாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் கேரள மாநிலத்திற்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.



தற்போது, கடந்த ஜந்து நாட்களாக தொடர்ந்து நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கிழங்கு வரத்து தடைபட்டுள்ளது. ஏற்கனவே, கொண்டுவரப்பட்ட உருளை கிழங்குகளும் விற்று தீர்ந்த நிலையில், ஒரு கிலோ கிழங்கு விலை ரூ. 5 வரை உயர்ந்துள்ளது. மேலும், நாள் ஒன்றுக்கு ரூ. 2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழங்கு மண்டி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் 

இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அறுவடை செய்து மேட்டுப்பாளையம் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் நிலைமை மோசமாக பாதிக்கப்படும் என்பதால் மத்திய, மாநில அரசுகள், லாரி உரிமையாளர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...