வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி : திருப்பூரில் வாலிபர் கைது

திருப்பூர்: திருப்பூரில் வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்வதாக பலரிடம் சேர்த்து ரூ. 27 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்வதாக பலரிடம் சேர்த்து ரூ. 27 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

திருப்பூர் குமரன் சாலையில் 'காக்ஸ் அன் கிங்டம்' என்னும் டூரிஸ்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாடு சுற்றுலா செல்ல விரும்புபவர்களை பேக்கேஜ் முறையில் அழைத்து செல்லப்படுவர். இதில், பெரம்பலூரைச் சேர்ந்த மோகன் என்பவர் மேலாளராகப் பணி புரிந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக வாடிக்கையாளர்கள் பேக்கேஜ் டீல் முறையில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், குறித்த தேதியில் அழைத்து செல்லவில்லை. 

இது தொடர்பாக மேலாளர் மோகனை தொடர்பு கொண்ட போது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நிறுவனமும் பூட்டியே கிடந்தது. அதன்பின் கோவை அலுவலகத்தில் புகார் செய்து, அவர்கள் விசாரணை மேற்கொண்ட போது போலியான புக் மூலம் ரூ. 27 லட்சம் கையாடல் செய்தது தெரிய வந்தது. பின்னர், கோவை அலுவலக மேலாளர் ஐசக் சாமுவேல், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...