திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வழங்கினார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது.
இந்த முகாமில் வருவாய்துறை சமூகநலன் மற்றும் கல்வி வேளாண்மைத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு கல்வி உதவி தொகை, விதவை உதவி தொகை மற்றும் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவி தொகை, திருமண உதவி தொகை, விவசாயிகளுக்கு சோலார் மின் மோட்டார்கள் என மொத்தம் ரூ. 43,34,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முகாமில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

"அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை உரிய முறையில் தகுதியான பயனாளிகளுக்கு விரைந்து வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் யாருக்கும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழாத வகையில், தொடர்ந்து தாலுகா வாரியாக சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படும்," என்றார் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது.
இந்த முகாமில் வருவாய்துறை சமூகநலன் மற்றும் கல்வி வேளாண்மைத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு கல்வி உதவி தொகை, விதவை உதவி தொகை மற்றும் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவி தொகை, திருமண உதவி தொகை, விவசாயிகளுக்கு சோலார் மின் மோட்டார்கள் என மொத்தம் ரூ. 43,34,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முகாமில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

"அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை உரிய முறையில் தகுதியான பயனாளிகளுக்கு விரைந்து வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் யாருக்கும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழாத வகையில், தொடர்ந்து தாலுகா வாரியாக சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படும்," என்றார் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி.