கோவை: இலங்கையில் இருந்து கோவை வந்த விமானத்தில் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: இலங்கையில் இருந்து கோவை வந்த விமானத்தில் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக கோவை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று கோவை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ அன்சாரி (38) என்பதும், எல்.இ.டி., டிவி-யின் உட்புறத்தில் வைத்து ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தங்க கட்டிகளை பரிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ. 34 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.