இலங்கையில் இருந்து கோவைக்கு ஒரு கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளை கடத்தி வந்தவர் கைது

கோவை: இலங்கையில் இருந்து கோவை வந்த விமானத்தில் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: இலங்கையில் இருந்து கோவை வந்த விமானத்தில் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக கோவை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று கோவை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ அன்சாரி (38) என்பதும், எல்.இ.டி., டிவி-யின் உட்புறத்தில் வைத்து ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.



இதையடுத்து தங்க கட்டிகளை பரிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தற்போது பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ. 34 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...