லாரி ஸ்டிரைக் எதிரொலி: பேருந்துகளின் மூலம் காய்கறிகளை பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் நீலகிரி விவசாயிகள்

நீலகிரி: லாரிகளின் தொடர் வேலைநிறுத்தத்தால் நீலகிரியில் விளையும் காய்கறிகளை, சென்னை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பிற மாவட்ட சந்தைகளுக்கு, அரசு பேருந்துகளின் மூலம் விவசாயிகள் விற்பனைக்கு எடுத்துச் சென்று வருகின்றனர்.

நீலகிரி: லாரிகளின் தொடர் வேலைநிறுத்தத்தால் நீலகிரியில் விளையும் காய்கறிகளை, சென்னை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பிற மாவட்ட சந்தைகளுக்கு, அரசு பேருந்துகளின் மூலம் விவசாயிகள் விற்பனைக்கு எடுத்துச் சென்று வருகின்றனர்.



சுங்கவரிக் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 6-வது நாளாக நீடிக்கிறது. இதன் காரணமாக, விவசாயப் பொருட்களை விற்பனைக்கான வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான விளை பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.

லாரிகளின் வேலைநிறுத்தத்தால் 'பிக்-அப்' உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களில் குறைந்தளவு மூட்டைகளை ஏற்றிச் சென்று விற்பனை செய்தாலும், நீலகிரியில் அறுவடை செய்யப்படும் பெரும் அளவிலான காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், லாரிகளின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் வரை, அரசு பேருந்துகளில் காய்கறிகளைக் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதில், உள்ளூரில் காய்கறிகளை இலவசமாகக் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம், சென்னை வரை பேருந்துகளில் காய்கறிகளைக் கொண்டு செல்லக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.



இது குறித்து மாவட்ட இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- லாரிகள் வேலை நிறுத்தத்தால், விவசாயிகள் விளை பொருட்களை அரசு பேருந்துகளில் சந்தைக்கு எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு, அரசு போக்குவரத்து துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது, 0423 - 2441260 என்ற எண்ணுக்கோ தொடர்பு கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...