திருப்பூர் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்திருப்பது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கான தலைகுனிவு என்றும், தமிழகத்திற்கான தலைகுனிவல்ல என சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்திருப்பது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கான தலைகுனிவு என்றும், தமிழகத்திற்கான தலைகுனிவல்ல என சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்திருந்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் குறித்து எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், "தமிழக நலனுக்காக ஓ.பி.எஸ்., மத்திய அமைச்சரை சந்திக்க முடியாமல் போயிருந்தால் அது தமிழகத்திற்கான தலைகுனிவு எனக் கருதலாம். ஆனால், அவர் தன் நலனுக்காக சந்திக்க சென்றிருப்பதால் அது அவருக்கான தலைகுனிவு மட்டுமே.

உள்ளாட்சி அமைப்புகளின் சொத்துவரி உயர்வை 50 முதல் 100 சதவிகிதம் உயர்த்தியிருப்பது மனிதநேய ஜனநாயகக் கட்சி கண்டிக்கிறது. அதனை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு அனைத்துக் கட்டத்திலும் தோல்வியடைந்து விட்டது. ஜி.எஸ்.டி., வரியால் பல லட்ச நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளது. ஜி.எஸ்.டி., வரியினை 10 சதவிகிதத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.,வின் நிலை மாறியிருக்கும். நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க.,விற்கு துணைபோயிருக்காது.
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் வெற்றிடத்தை நடிகர்களால் நிரப்பிட முடியாது. கோடம்பாக்கத்தில் தலைவர்களை தேடும் நிலை முற்றுபெற்றிருக்கிறது. பெருமுதலாளிகள் அம்பானி, அதானி போன்றோர்தான் தற்போது நாட்டை ஆள்கின்றனர். மத்தியில் 3-வது அணி எந்தவிதத்திலும் நன்மையளிக்காது. சாதி மற்றும் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு மாற்றாக வலுவான அணியினை அமைத்திட வேண்டும். இந்திய மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறைக்கு இந்திய அரசு கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்திருந்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் குறித்து எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், "தமிழக நலனுக்காக ஓ.பி.எஸ்., மத்திய அமைச்சரை சந்திக்க முடியாமல் போயிருந்தால் அது தமிழகத்திற்கான தலைகுனிவு எனக் கருதலாம். ஆனால், அவர் தன் நலனுக்காக சந்திக்க சென்றிருப்பதால் அது அவருக்கான தலைகுனிவு மட்டுமே.

உள்ளாட்சி அமைப்புகளின் சொத்துவரி உயர்வை 50 முதல் 100 சதவிகிதம் உயர்த்தியிருப்பது மனிதநேய ஜனநாயகக் கட்சி கண்டிக்கிறது. அதனை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு அனைத்துக் கட்டத்திலும் தோல்வியடைந்து விட்டது. ஜி.எஸ்.டி., வரியால் பல லட்ச நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளது. ஜி.எஸ்.டி., வரியினை 10 சதவிகிதத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.,வின் நிலை மாறியிருக்கும். நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க.,விற்கு துணைபோயிருக்காது.
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் வெற்றிடத்தை நடிகர்களால் நிரப்பிட முடியாது. கோடம்பாக்கத்தில் தலைவர்களை தேடும் நிலை முற்றுபெற்றிருக்கிறது. பெருமுதலாளிகள் அம்பானி, அதானி போன்றோர்தான் தற்போது நாட்டை ஆள்கின்றனர். மத்தியில் 3-வது அணி எந்தவிதத்திலும் நன்மையளிக்காது. சாதி மற்றும் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு மாற்றாக வலுவான அணியினை அமைத்திட வேண்டும். இந்திய மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறைக்கு இந்திய அரசு கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.