நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை நகரில் உள்ள சாலைகளில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, எருமை, குதிரை போன்ற கால்நடைகள் உலா வருவதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை நகரில் உள்ள சாலைகளில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, எருமை, குதிரை போன்ற கால்நடைகள் உலா வருவதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். ஆனாலும் கால்நடைகள் சாலைகளில் சுற்றி வருவதைத் தடுக்க முடியாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால்நடைகளுக்கு டோக்கன் போடப்பட்டு நகராட்சியில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இது வெறும் கண்துடைப்பாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று உதகை, கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராட்டன் டாட்டா சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தோடர் இன மக்கள் வளர்க்கும் எருமை என்று மின்சாரம் பாய்ந்து பலியானது. இந்த சூழலில், சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததுள்ளது.

மேலும், இந்த சாலையானது, பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாக இருப்பதால் அந்த டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். ஆனாலும் கால்நடைகள் சாலைகளில் சுற்றி வருவதைத் தடுக்க முடியாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால்நடைகளுக்கு டோக்கன் போடப்பட்டு நகராட்சியில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இது வெறும் கண்துடைப்பாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று உதகை, கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராட்டன் டாட்டா சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தோடர் இன மக்கள் வளர்க்கும் எருமை என்று மின்சாரம் பாய்ந்து பலியானது. இந்த சூழலில், சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததுள்ளது.

மேலும், இந்த சாலையானது, பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாக இருப்பதால் அந்த டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
