கோவை: மேட்டுப்பாளையத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடித்த வனத்துறையினர் அதனைப் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடித்த வனத்துறையினர் அதனைப் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையில் சாமியார் தோட்டம் எதிரே இரவு 8.00 மணியளவில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முடியாமல் நடுரோட்டில் இருப்பதை பார்த்த கோவிலுக்கு சென்ற பக்தர்கள் அதிர்ச்சியில் நின்றனர்.

அதே நேரத்தில் அந்த வழியாக வந்த வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர் காளியப்பன், அந்த மலைப்பாம்பைப் பிடித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் ஏற்பாட்டில் அடர்ந்த வனப்பகுதியில் மலைப்பாம்பு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது.