கோவை : பீகாரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பப்புகுமார் (30) என்பவரை பாட்னா மகளிர் காவல்நிலைய போலீசார் கோவையில் இன்று கைது செய்தனர்.
கோவை : பீகாரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பப்புகுமார் (30) என்பவரை பாட்னா மகளிர் காவல்நிலைய போலீசார் கோவையில் இன்று கைது செய்தனர்.
அவுரங்கபாத் பகுதியைச் சேர்ந்த பப்புகுமார் கோவை சூலூர் விமானப்படையில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதனடிப்படையில், பப்புகுமாரை கைது செய்ய பிடிவாரண்டுடன் பாட்னா அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பார்வதி குமாரி தலைமையில் 3 பேர் கொண்ட குழு கோவை வந்தனர்.
இங்கு, சூலூர் காவல்நிலைய போலீசார் உதவியுடன் பப்புகுமாரை கைது செய்த பாட்னா போலீசார் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, அவரை பீகார் அழைத்துச் செல்ல நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்ததையடுத்து தொடர்ந்து, போலீசார் அவரை ரயில் மூலம் பீகார் அழைத்து சென்றனர். வரும் 27-ம் தேதி பீகார் நீதிமன்றத்தில் பப்புகுமார் ஆஜர்படுத்த உள்ளார்.
அவுரங்கபாத் பகுதியைச் சேர்ந்த பப்புகுமார் கோவை சூலூர் விமானப்படையில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதனடிப்படையில், பப்புகுமாரை கைது செய்ய பிடிவாரண்டுடன் பாட்னா அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பார்வதி குமாரி தலைமையில் 3 பேர் கொண்ட குழு கோவை வந்தனர்.
இங்கு, சூலூர் காவல்நிலைய போலீசார் உதவியுடன் பப்புகுமாரை கைது செய்த பாட்னா போலீசார் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, அவரை பீகார் அழைத்துச் செல்ல நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்ததையடுத்து தொடர்ந்து, போலீசார் அவரை ரயில் மூலம் பீகார் அழைத்து சென்றனர். வரும் 27-ம் தேதி பீகார் நீதிமன்றத்தில் பப்புகுமார் ஆஜர்படுத்த உள்ளார்.