விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளருக்கு எதிர்ப்பு : வெளியூர் நபரை நியமித்ததால் கிராம மக்கள் முற்றுகை

கோவை : மேட்டுப்பாளையம் அருகே காந்தவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு விதிகளை மீறி வெளியூர் நபரை சத்துணவு அமைப்பாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கோவை :  மேட்டுப்பாளையம் அருகே காந்தவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு விதிகளை மீறி வெளியூர் நபரை சத்துணவு அமைப்பாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். 

மலையடிவார கிராமமான காந்தவயல் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சத்துணவு அமைப்பாளர் இல்லாமல் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, உள்ளூரைச் சேர்ந்த நபரை அப்பணிக்கு நியமிக்க ஊர்மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தங்களது வனம் சார்ந்த காந்தவயல் கிராமத்தையும், பிற ஊர்களையும் இடையில் ஓடும் காந்தையாறு பிரிப்பதால் வெளியூர் நபர்கள் இங்கு வந்து செல்வது சாத்தியமற்றது என்பதாலும், சத்துணவு அமைப்பாளர் பணிக்கு தொடர்புடைய பணியிடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிற்குள் இருப்போர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்ற அரசு விதிமுறைப் படியுமே இக்கோரிக்கையினை அவர்கள் முன்வைத்தனர்.



இந்த நிலையில், பணி நியமன விதிகளை மீறி காந்தவயல் கிராமத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மூடுதுறை என்னும் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை சத்துணவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், அவர் தற்போது பணியில் சேர்ந்தாலும் தொடர்ந்து இங்கு வந்து பணியாற்ற இயலாது, தற்போது கூட காந்தயாற்றின் காட்டாற்று வெள்ளத்தில் இங்குள்ள பாலம் மூழ்கும் நிலையில், அவர் எப்படி தங்களது கிராமத்திற்கு தினசரி வந்து செல்ல இயலும் எனக் கேள்வி எழுப்புகின்றனர். 

இதேபோல, முன்பு நியமிக்கப்பட்டவர்கள் யாரும் தங்களது பணியினை தொடர இயலாமல் வேறு இடத்திற்கு சென்று விட்ட நிலையில், மீண்டும் இதனையே தொடர்வது கூடாது என்கின்றனர். உள்ளூரைச் சேர்ந்த தகுதியுடைய 27 பேர் இப்பணிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், சட்ட விதிகளுக்குப் புறம்பாக இந்தப் பணி நியமனம் நடைபெற்றுள்ளதாக காந்தவயல் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

இதனையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளர் பெண் இன்று பொறுப்பு ஏற்கும் முன்பாக, காந்தவயல் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்திலும், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் காந்தவயல் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், தங்களது கோரிக்கையினை மனுவாக எழுதி பெற்றுக்கொண்ட அதிகாரிகள், இதனை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தபின், ஊர் மக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் எதிர்ப்பால், புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட பெண் பொறுப்பேற்காமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...