பேட்ச் ஒர்க் போடுவதற்கு கூட இலாயக்கில்லாத கோவை மாநகராட்சி: தி.மு.க., எம்.எல்.ஏ., நா. கார்த்திக் காட்டம்

கோவை: பேட்ச் ஒர்க் போடுவதற்கு கூட இலாயக்கில்லாத நிலையில் தற்போது கோவை மாநகராட்சி இருப்பதாக தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: பேட்ச் ஒர்க் போடுவதற்கு கூட இலாயக்கில்லாத நிலையில் தற்போது கோவை மாநகராட்சி இருப்பதாக தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயனிடம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., நா.கார்த்திக் தலைமையில் தி.மு.க.,வினர் இன்று மனு அளித்தனர்.



அப்போது செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ., நா.கார்த்திக் பேசியதாவது:- தமிழக அரசு அறிவித்துள்ள 100 சதவீத சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டி பெற கோவை மக்கள் சார்பில் மாநகராட்சியின் மூலம் அரசுக்குப் பரிந்துரை செய்ய வலியுறுத்தியுள்ளோம். கடந்த பத்து வருடங்களாக நகரில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தியால் இயங்கும் மின் விளக்குகள் மாநகராட்சியால் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை.

தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட புட்டுவிக்கி சாலையை ரூ. 11 கோடி செலவில் புனரமைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 15 நாட்களுக்கு முன் பெய்த மழையால் அந்த சாலை மீண்டும் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது. உள்ளாட்சி துறை அமைச்சரின் தொகுதியிலேயே தரமான சாலைகள் இல்லை. பேட்ச் ஒர்க் போடுவதற்கு கூட இலாயக்கில்லாத நிலையில், தற்போது கோவை மாநகராட்சி உள்ளது. அந்த சாலையை அமைத்த ஒப்பந்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும், காந்தி மாநகரிலிருந்து சத்தியமங்கலம் சாலை வரை உள்ள இரண்டு கிலோமீட்டர் சாலை மக்களால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் நகரில் உள்ளன. அவை அனைத்தையும் தரமான சாலையாக சரி செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம்," என்றார்.



மேலும் அவர் கூறுகையில், சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, ஏற்கனவே முடிவு செய்தபடி வரும் 31-ம் தேதி அனைத்து தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடத்தப்படும், என அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...