நீலகிரி: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மாவட்ட குடும்ப நலத் துறையின் சார்பில் உதகையில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நீலகிரி: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மாவட்ட குடும்ப நலத் துறையின் சார்பில் உதகையில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக மக்கள் தொகை தினம் ஜீன் 11-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து, மாணவ-மாணவிகள், தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், உலக மக்கள் தொகை தினத்தின் கடைசி நிகழ்ச்சியாக நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட குடும்ப நலத் துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் நிர்மலா, சுகாதார பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவியர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி ஒய்.எம்.சி.ஏ. வரை சென்று நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
உலக மக்கள் தொகை தினம் ஜீன் 11-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து, மாணவ-மாணவிகள், தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், உலக மக்கள் தொகை தினத்தின் கடைசி நிகழ்ச்சியாக நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட குடும்ப நலத் துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் நிர்மலா, சுகாதார பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவியர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி ஒய்.எம்.சி.ஏ. வரை சென்று நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.