அவினாசி-அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் - இயற்கை ஆர்வலர்கள்

கோவை: நீண்ட இழுபறிக்குப்பின் அவினாசி-அத்திக்கடவு கூட்டுக்குடி நீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு தற்போது ரூ.1850 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

கோவை: நீண்ட இழுபறிக்குப்பின் அவினாசி-அத்திக்கடவு கூட்டுக்குடி நீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு தற்போது  ரூ.1850 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்திற்கு தற்போது காளிங்கராயன் வாய்க்காலில் இருந்து ஆண்டுக்கு 2 டி.எம்.சி நீர் எடுத்து, அதனை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த முன்னதாக ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, ரூ.1850 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது வகுக்கப்பட்ட இத்திட்டத்தில் சிறிய மாற்றம் செய்தால், மின்சாரம் வீணாவதைத் தடுக்க முடியும் என்றும், சுத்தமான நீர் கிடைக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இது குறித்து கவுசிகா நதி மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போது காளிங்கராயன் வாய்க்காலில் ஆண்டுக்கு 2 டி.எம்.சி நீர் எடுத்து விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் மூலம், நீரை விநியோகிக்க அதிக ஆற்றல் தேவையாகிறது. ஏனெனில், அங்கிருந்து தண்ணீரை கருவலூர் மற்றும் அதற்கு மேல் உள்ள மேடான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே, இதற்கு அதிக மின்னாற்றல் தேவை.

ஆனால், பவானி ஆற்றில் இருந்து 1 டி.எம்.சி நீரையும்,  எடுக்கும் போது காளிங்கராயன் வாய்க்காலில் இருந்து 1 டி.எம்.சி நீரையும் எடுத்து விநியோகம் செய்யும் போது, மேடான பகுதிகளுக்கு, பவானி ஆற்றில் இருந்து கிடக்கும் 1 டி.எம்.சி நீரை விநியோகிக்க முடியும். இதனால் மின்சாரம் சேமிக்கப்படும்.

நீர் முன்னதாகவே எடுக்கப்படும் போது சுத்தமானதாகவும் கிடைக்கும். இரண்டு இடங்களில் நீர் எடுப்பதால், குடிநீர் விநியோகம் எந்த பகுதிக்கும் கிடைக்கும் நிலை ஏற்படும்.

இந்த மாற்றம் தொடர்பாக அரசுத் துறைகளுக்கு மனு அளித்தோம். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...