கோவை: நூறு நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: நூறு நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்டம் கடந்த 7 மாதங்களாக செயல் படாமல் உள்ளதாகவும், இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 600 கோடி ரூபாய் பணத்தை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கட்டிடம் கட்ட சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழக அரசு அறிவித்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும், கிராமப்புற மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்டம் கடந்த 7 மாதங்களாக செயல் படாமல் உள்ளதாகவும், இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 600 கோடி ரூபாய் பணத்தை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கட்டிடம் கட்ட சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழக அரசு அறிவித்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும், கிராமப்புற மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
