மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்

கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் 27-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.



கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் 27-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் புகழ் மிக்க வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குண்டம் திருவிழா விமர்சையாக நடைபெறும். அதே போல் இந்தாண்டு 27-ம் ஆண்டு குண்டம் திருவிழா நிகழ்ச்சி கடந்த 17-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

இதனையடுத்து, தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தது. ஆடிக் குண்டத்தை முன்னிட்டு 22-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதற்காக அமைக்கப்பட்ட 36 அடி நீலம், 1 1/2 அகலம் கொண்ட குண்டம் அமைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. குண்டம் அருகில் பொங்கல் வைக்கப்பட்டு சிம்ம வாகனத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் பூ பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு குண்டம் இறங்கும் இடத்தை அடைந்தது. அதன் பின்னர் தலைமை பூசாரி குண்டத்தை சிறப்பு பூஜை செய்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.



அவரைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். திருவிழாவை முன்னிட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில் ஊர்காவல்படை உட்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...