கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் குளங்கள் மற்றும் நீர்நிலைகளின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் குளங்கள் மற்றும் நீர்நிலைகளின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இது குறித்து கோவை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி குளங்கள் மற்றும் நீர்நிலைகள் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அலுவலர்களுடன் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 8 குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்துக்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டுமெனவும், குளங்களில் பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி அலுவலர்கள் பொதுப் பணித்துறையுடன் இணைந்து நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும், மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.
மேலும், குளங்களில் நீர்வரத்துக்கான ஆக்கிரமிப்புகளை கண்காணித்து அகற்ற, தண்ணீர் வரத்து சரிசெய்யவும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அனைத்து வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்களில் நிறுவிட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் தண்ணீர் சேமிப்புக்காக விழிப்புணர்வுக்காக பட விளக்கம் இக்கூட்டத்தில் அளிக்கப்பட்டது. சேத்துமா வாய்க்கால், குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்தினை கண்காணிக்கவும், தேவையான மணல் மற்றும் சாக்குகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தர்.
இக்கூட்டத்தில் மாநகராட்சிக்கு 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளின் பயன்கள் குறித்து தன்னார்வ அமைப்பினர் எடுத்துரைத்தனர்.
இது குறித்து கோவை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி குளங்கள் மற்றும் நீர்நிலைகள் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அலுவலர்களுடன் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 8 குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்துக்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டுமெனவும், குளங்களில் பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி அலுவலர்கள் பொதுப் பணித்துறையுடன் இணைந்து நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும், மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.
மேலும், குளங்களில் நீர்வரத்துக்கான ஆக்கிரமிப்புகளை கண்காணித்து அகற்ற, தண்ணீர் வரத்து சரிசெய்யவும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அனைத்து வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்களில் நிறுவிட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் தண்ணீர் சேமிப்புக்காக விழிப்புணர்வுக்காக பட விளக்கம் இக்கூட்டத்தில் அளிக்கப்பட்டது. சேத்துமா வாய்க்கால், குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்தினை கண்காணிக்கவும், தேவையான மணல் மற்றும் சாக்குகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தர்.
இக்கூட்டத்தில் மாநகராட்சிக்கு 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளின் பயன்கள் குறித்து தன்னார்வ அமைப்பினர் எடுத்துரைத்தனர்.