கோவை: கோவையில் துப்புரவு பணியாளர் மகேந்திரன் விஷ வாயு தாக்கி பலியான விபத்தில் ரூ.10 லட்சம் நிவாரணம் வேண்டி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டியபடி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
கோவை: கோவையில் துப்புரவு பணியாளர் மகேந்திரன் விஷ வாயு தாக்கி பலியான விபத்தில் ரூ.10 லட்சம் நிவாரணம் வேண்டி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டியபடி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த இவர், தனியாக துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி காந்திபுரம் பகுதியிலுள்ள மாணிக்கவாசகம் என்பவரது வீட்டில் துப்புரவு பணிக்காக சென்றார். அப்போது கழிவு நீர்த் தொட்டியை திறந்து சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கியதில் மகேந்திரன் உயிரிழந்தார்.
இந்த சூழலில், பலியான மகேந்திரனின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர், கண்களில் கருப்பு துணி கட்டியபடி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். மேலும், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதில், மகேந்திரன் உயிரிழப்புக்கு நிவாரணமாக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.