நீலகிரியில் பாரம்பரிய நடனத்துடன் அறுவடை திருவிழாவை நடத்திய 33 கிராமங்களின் மக்கள்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கீழ் அப்புக்கோடு பகுதியில் அறுவடை திருவிழாவை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் 33 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கீழ் அப்புக்கோடு பகுதியில் அறுவடை திருவிழாவை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் 33 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முதுகெலும்பாகத் திகழ்ந்து வருகிறது. இதனையடுத்து மலை தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், பூண்டு, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று படுகர் இன மக்கள் வாழும் மேற்கு நாடு சீமைக்குட்பட்ட, கீழ் அப்புக்கோடு பகுதியில் 33 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் குல தெய்வ கோவிலில் காய்கறி அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டது. படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் நடைபெற்ற இந்த திருவிழாவில் 33 கிராமங்களையும் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கடந்த மார்ச் மாதம் விதை நடவு செய்யும் விழாவாகக் கொண்டாடப்பட்டு, அன்று பயிரிடப்பட்ட பயிர்களை இன்று அறுவடை செய்கின்றனர். அறுவடை செய்யப்பட்ட பயிர்களை கடவுளிடம் காணிக்கையாக செலுத்தி இந்தாண்டு பெய்த மழையைப் போல் ஆண்டுதோறும் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி, பயிர் செய்த காய்கறிகளை இன்று முதல் விற்பனைக்காக எடுத்துச் செல்லும் விழாவாக இவ்விழா கொண்டாடப்பட்டது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...