நீலகிரி: நீலகிரி மாவட்டம் கீழ் அப்புக்கோடு பகுதியில் அறுவடை திருவிழாவை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் 33 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கீழ் அப்புக்கோடு பகுதியில் அறுவடை திருவிழாவை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் 33 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முதுகெலும்பாகத் திகழ்ந்து வருகிறது. இதனையடுத்து மலை தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், பூண்டு, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இன்று படுகர் இன மக்கள் வாழும் மேற்கு நாடு சீமைக்குட்பட்ட, கீழ் அப்புக்கோடு பகுதியில் 33 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் குல தெய்வ கோவிலில் காய்கறி அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டது. படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் நடைபெற்ற இந்த திருவிழாவில் 33 கிராமங்களையும் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த மார்ச் மாதம் விதை நடவு செய்யும் விழாவாகக் கொண்டாடப்பட்டு, அன்று பயிரிடப்பட்ட பயிர்களை இன்று அறுவடை செய்கின்றனர். அறுவடை செய்யப்பட்ட பயிர்களை கடவுளிடம் காணிக்கையாக செலுத்தி இந்தாண்டு பெய்த மழையைப் போல் ஆண்டுதோறும் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி, பயிர் செய்த காய்கறிகளை இன்று முதல் விற்பனைக்காக எடுத்துச் செல்லும் விழாவாக இவ்விழா கொண்டாடப்பட்டது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முதுகெலும்பாகத் திகழ்ந்து வருகிறது. இதனையடுத்து மலை தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், பூண்டு, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இன்று படுகர் இன மக்கள் வாழும் மேற்கு நாடு சீமைக்குட்பட்ட, கீழ் அப்புக்கோடு பகுதியில் 33 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் குல தெய்வ கோவிலில் காய்கறி அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டது. படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் நடைபெற்ற இந்த திருவிழாவில் 33 கிராமங்களையும் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த மார்ச் மாதம் விதை நடவு செய்யும் விழாவாகக் கொண்டாடப்பட்டு, அன்று பயிரிடப்பட்ட பயிர்களை இன்று அறுவடை செய்கின்றனர். அறுவடை செய்யப்பட்ட பயிர்களை கடவுளிடம் காணிக்கையாக செலுத்தி இந்தாண்டு பெய்த மழையைப் போல் ஆண்டுதோறும் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி, பயிர் செய்த காய்கறிகளை இன்று முதல் விற்பனைக்காக எடுத்துச் செல்லும் விழாவாக இவ்விழா கொண்டாடப்பட்டது.