லாரி ஸ்டிரைக்: கோவையில் அத்துமீறி சரக்கு ஏற்றிய கர்நாடக லாரியை சிறை பிடித்ததால் பரபரப்பு

கோவை: நாடு முழுவதும் லாரி வேலை நிறுத்தம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் கோவை உக்கடம் பகுதியில் சரக்கு ஏற்றிக்கொண்டு இருந்த கர்நாடக லாரியை கோவை லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சிறை பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: நாடு முழுவதும் லாரி வேலை நிறுத்தம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் கோவை உக்கடம் பகுதியில் சரக்கு ஏற்றிக்கொண்டு இருந்த கர்நாடக லாரியை கோவை லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சிறை பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இன்று நான்காவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 4.5 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன.

இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. கோவையைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு சுமார் 20 கோடி ரூபாய் என நான்கு நாட்களில் சுமார் 80 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அத்தியாவசியமான பொருட்களான மருந்து, பால், காய்கறிகள் போன்றவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், கோவையிலிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய லாரிகள் உக்கடம் பகுதியில் உள்ள லாரி பேட்டை மற்றும் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், உக்கடம் பகுதியில் கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரி ஒன்று சரக்கு ஏற்றிக்கொண்டு இருப்பதாக கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு தகவல் வந்தது. அதன் பேரில் அங்கு விரைந்த கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அந்த லாரியை மடக்கிப் பிடித்தனர்.

மேலும், லாரியின் ஓட்டுநரை அழைத்து லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் லாரிகளை இயக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினர். தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள அந்த லாரியின் உரிமையாளரை தொடர்பு கொண்ட கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், போராட்டம் முடிவுக்கு வந்ததற்குப் பிறகு சிறைபிடிக்கப்பட்ட லாரி அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்தனர்.



ஏற்கனவே கேரளாவில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த லாரி கிளீனர், சில நபர்களால் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். அதேபோல அந்த வண்டியின் லாரி ஓட்டுநரும் ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் கோவையில் இருந்து லாரிகள் கிளம்புவதற்கு லாரி ஓட்டுநர்கள் கெடுபிடி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...