முடங்கிக்கிடக்கும் லாரிகள்: தொழில் நகரமான திருப்பூரில் ரூ.400 கோடி வரை வர்த்தக பாதிப்பு

திருப்பூர்: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நான்காவது நாளாக தொடர்வதால் திருப்பூரில் ரூ.400 கோடி வரை வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நான்காவது நாளாக தொடர்வதால் திருப்பூரில் ரூ.400 கோடி வரை வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டீசல் மற்றும் பெட்ரோலுக்கான விலையைக் குறைக்க வேண்டும், நாள்பட்ட சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சங்கம் மற்றும் உறுப்பினர் சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20–ம் தேதி தொடங்கிய இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ஏராளமான லாரிகள் இயங்கவில்லை. திருப்பூர் மாவட்டத்திலும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. லாரிகள் இயக்கப்படாததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு

இந்த போராட்டம் காரணமாக திருப்பூரில் பின்னலாடை தொழில் துறையினர் கடும் இழப்பைச் சந்தித்து வருகிறார்கள். திருப்பூரில் இருந்து சரக்குகளை வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அனுப்ப முடியாமல் தொழில் துறையினர் திணறி வருகிறார்கள்.



இதன் காரணமாக பின்னலாடை சரக்குகள் அனைத்தும் அந்தந்த நிறுவனங்களிலேயே தேக்கமடைந்து உள்ளன. இதனால் ரூ.400 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.

காய்கறிகள்

திருப்பூர் உழவர் சந்தைக்கு உடுமலை, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக விவசாயிகள், வியாபாரிகள் காய்கறி மூடைகள் மற்றும் சரக்குகளை அரசு பேருந்துகளில் ஏற்றி விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.



சிறிய ரக சரக்கு வாகனங்களில் காய்கறிகளை ஏற்றிச் செல்வதாகவும், ஒரு லாரியில் ஏற்றிச் செல்லும் சரக்குகளை தற்போது இரண்டு சிறிய ரக சரக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வாடகை அதிகமாக தரவேண்டிய சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.



இதுபோல் காங்கேயத்தில் இருந்து வட மாநிலங்களுக்குத் தேங்காய் எண்ணெய் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் மற்றும் கொப்பரை ஏற்றிச்செல்லும் லாரிகள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தேங்காய் லாரிகளும் வரவில்லை. அரிசி ஆலைகள் நிறைந்த இந்த பகுதிக்கு ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளும் வரவில்லை.



லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக காங்கேயம் பகுதியில் தேங்காய் எண்ணெய் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உற்பத்தி செய்யப்பட்ட எண்ணெய், கொப்பரை ஆகியவை பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படாமல் தேக்கமடைந்துள்ளது. இதுபோல் மற்ற பகுதிகளில் இருந்து வர வேண்டிய லாரிகளும் வராததால் களங்களில் தேங்காய் உடைப்பு பணி நடைபெறவில்லை.

இந்த போராட்டம் காரணமாக காங்கேயம் தாலுகா பகுதியில் மட்டும் தினசரி சுமார் ரூ.5 கோடிக்கு தேங்காய் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ள சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்களும் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மத்திய, மாநில அரசுகள் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...